90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.
குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.
இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.
ரகசியம் உடைத்த கலா மாஸ்டர்
பிரபல நடன இயக்குனருமான கலா மாஸ்டர் சமீபத்திய ஒரு பேட்டி மீனா-வை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கேட்ட போது அவர் என்ன கூறினார் என்று பதில் கொடுத்துள்ளார்.
நடிகை மீனா-வின் கணவர் வித்யா சாகர் போல ஒரு ஆளை பார்ப்பது மிகவும் கடினம். அந்த அளவுக்கு நேர்மையான மனிதர், பழகுவதற்கு இனிமையானவர் அவருடைய இழப்பை எங்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீனா எப்படி ஏற்றுக்கொள்வார்.
என்ன தான் இருந்தாலும், அவருடைய கணவரின் நினைப்பு இருக்கத்தானே செய்யும். நான் அவளை சந்திக்கும் போதெல்லாம் பேச்சு வாக்கில் அவளுடைய அடுத்த வாழ்க்கையை பற்றி பேசுவேன். உனக்கும், உன் மகளுக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்க்கை இருக்கிறது.
இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறது. உனக்கு ஒரு துணை வேணும் என இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று வாயை திறந்தாலே என்னை கடுமையாக திட்டுவா.. உங்க வேலையை பாத்துகிட்டு போங்க.. என்று சொல்லுவா.. ஏய் என்னடி இது சின்ன வயது தானே..என்று கூறினால்.. சேச்சி.. போதும்.. Dont Talk ..-ன்னு சொல்லுவா.. அதை பத்தி அப்புறம் பேசவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.