நடிகை அர்ச்சனா ஹரிஷ்
தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அர்ச்சனா பகீர்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்து ஏதேனும் கூற முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அர்ச்சனா ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் செவிலியராக நடித்துக் கொண்டிருந்தேன்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு எனக்கு செவிலியர் உடை கொடுக்கப்பட்டது. இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நாளை நீங்கள் இந்த உடையை தான் உடுத்த வேண்டும் என்று கூறினார். இந்த உடை உங்களுக்கு சரியாக இருக்குமா..? என்று பார்க்க வேண்டும்.
உங்களுடைய உடையை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார். சரி சாதாரணமாக கேட்கிறார் என்று முட்டி வரை தூக்கி காட்டினேன். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றால் சரி என்று முட்டிக்கு மேல் உடையை தூக்கினேன்.
உடனே இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது. நாளைக்கு வந்து, அந்த உடையை அணிந்தே காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்.
அதன்பிறகு அடுத்த நாள் அந்த படப்பிடிப்புக்கு செல்லவே இல்லை. அந்த படத்திலிருந்து விலகி விட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த இயக்குனர் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.