நித்யா ராம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் கங்கா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நித்யா ராம். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் ஒருசில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
மேலும், கன்னடம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நித்யா ராம். சுந்தர். சி தயாரிப்பில் தமிழ் ஒளிபரப்பான நந்தினி தொடர் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
கன்னடத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது அண்ணா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கூச்சமில்லாமல் கூறிய நித்யா ராம்
பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் அந்த சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் மிர்ச்சி செந்திலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது என்று கூறியிருக்கிறார்.
அதுவும் நான் நான்கு ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறேன் நான் ஏதாவது தவறாக செய்தால் தயவு செய்து என்னிடம் கூறுங்கள் என்று அவரிடம் கூறிவிட்டு தான் நடிப்பேன். ரொமான்ஸ் காட்சிகளில் அவருடைய கண்களை என்னால் நீண்ட நேரம் பார்க்க முடியாது. பார்த்தால் என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.
அந்த அளவுக்கு அவருடைய கண்கள் மற்றும் முகபாவனைகள் எல்லாம் தத்ரூபமாக இருக்கும். ஆனால், அவருடன் ரொமான்ஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும் என பேசி இருக்கிறார் நடிகை நித்யா ராம்.