நடிகை ஸ்ருத்திகா
தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா, இவருக்கு சினிமா பின்புலம் இருப்பதால் தனது 13 வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார், ஆனால் ஸ்ருத்திகாவின் பெற்றோர் என்னுடைய மகளுக்கு சிறுவயது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு அவருக்கு மெச்சூரிட்டி கிடையாது அதனால் நடிக்க அனுப்ப மாட்டேன் என மறுத்து விட்டார்கள்.
பின்பு தமிழில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியாகிய நளதமயந்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தமிழில் தித்திக்கிற என்ற திரைப்படத்திலும் நடித்தார் பின்புதான் படைக்க வேண்டும் என நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மூன்றாவது சீசனின் குக் வித் கோமாளி பட்டத்தை வென்றவர் நடிகை ஸ்ருத்திகா.
அதனை தொடர்ந்து பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் போட்டியாளராகவும் நடுவராகவும் என கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
முதலிரவில் 4 Pillow நடுவில் வச்சி
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் தங்களுடைய திருமணம் மற்றும் முதலிரவு குறித்த சில ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது எங்களுடைய திருமணம் நடந்தது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.
ஆனால் முதலிரவு என்று நடந்தது என்றால்.. திருமணத்தன்று என்னுடைய கணவருக்கு யாரோ அன்னாசி பழ ஜூஸ் கொடுத்துள்ளார்கள். அதை குடித்தால் அவருக்கு காய்ச்சல் வந்துவிடும்.
அதேபோல அன்று அவருக்கு காய்ச்சல் வந்து விட்டது. மிகவும் அதிகமான காய்ச்சல். அதனால் முதலிரவு அன்று என்னுடைய கணவர் மற்றும் எனக்கு நடுவில் நான்கு தலையணைகளை வைத்து தூங்கினோம். இப்படித்தான் எங்களுடைய முதல் இரவு கடந்தது.. என பேசி இருக்கிறார்