நடிகை பாப்ரி கோஷ்
சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.
நாயகி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு அழைத்தால்.. அந்த இடத்தில் முத்தம் குடுப்பேன்..
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் உங்களிடம் பட வாய்ப்புக்காக யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கிறார்களா..? அப்படி அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் நபர்களுக்கு உங்களுடைய பதில் என்ன…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை பாப்ரி கோஷ் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் சான்ஸ் கிடைக்கும் யாராவது கூறினால்.. அங்கே அவரிடம் எதுவும் சொல்லக்கூடாது.
அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். அவருடைய மனைவி குழந்தைகள் குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் பொழுது அனைவரின் முன்னிலையிலும் அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் ஏய்.. என்ன செய்கிறாய்..? என்று கண்டிப்பாக கேட்பார்கள்.
அப்போது நான் சொல்வேன்.. எனக்கு சான்ஸ் கொடுக்கிறேன் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.. அதான் இப்போது வந்து இப்படி செய்தேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிடுவேன்.. அதன் பிறகு குடும்பத்தினர் அந்த நபரை பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.