நடிகை சுனைனா
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தது. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா.
தமிழை தவிர கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி, வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நடிகர் என்னை டார்ச்சர் பண்ணார்
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சினிமா துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள். அவர்களிடம் நான் ஏதாவது கேட்டு.. அது வேறு வகையியல் சென்று விட்டால் என்ற பயத்தில் இருந்தேன்.
அப்போது நகுல் என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். எனக்கு ஒரே கடுப்பாக இருக்கும். அப்போது எனக்கு டார்ச்சர் போல தோன்றியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல.. என்னை படக்குழுவுடன் பழக வைக்க வேண்டும். என்னை சாதரணமாக பேச வைக்க வேண்டும் என்று நகுல் முயற்சி எடுத்துள்ளார் என்னுடைய நல்லதுக்குத்தான் அப்படி செய்தார் என புரிந்தது என பேசியுள்ளார்.