வாரிசு நடிகை
அப்பா நடிகரை பழி வாங்குவதற்காக வாரிசு நடிகையை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிவிட்டு அக்கட தேசத்து இளம்பெண் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்தது வாரிசு நடிகையை வயிற்றில் இருந்த கருவுடன் தவிக்க விட்டு சென்றார் அந்த மேலாடை நடிகர்.
ஏமாற்றம் தாங்காமல் அழுது புலம்பிய வாரிசு நடிகைக்கு எதிர்பாராத விதமாக கரு கலைந்திருகிறது. இது நல்லதா..? கெட்டதா..?-ன்னு தெரியல.. எல்லாம் கடவுள் விட்ட வழி என தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டார் வாரிசு நடிகை.
திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணை சமாதானம் செய்ய பெண்ணின் வீட்டிற்கு சென்ற மேலாடை நடிகரை மரியாதை கெட்டுவிடும் என்று வாசலிலேயே வைத்து திட்டி அனுப்பியுள்ளது மணப்பெண்ணின் குடும்பம். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மேலாடை நடிகர் உடனே வேறு ஒருவரை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளார்.
சரி என வாரிசு நடிகை மற்றும் அக்கட தேசத்து பெண் என இந்த இருவர் மட்டும் இல்லாமல் நடுவில் மங்களகரமான மலையாள நடிகைக்கு ரூட்டு போட்டு வைத்திருந்திருகிறார். சரி, மங்களகரமான நடிகையை மங்களம் பாடி விட வேண்டியது என நாசுக்காக மலையாளத்துக்கு போன் போட்டுள்ளார்.
பண்ணை வீட்டில் தஞ்சம்
ஆனால், அங்கு தான் மேலாடை நடிகருக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், நிச்சயம் முடித்த அக்கட தேசத்து பெண் மலையாள மங்களகரத்தை தொடர்பு கொண்டு வாரிசு நடிகையின் விவாகரத்தையும், தங்கள் திருமணம் நின்று போன விவகாரத்தையும் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் பங்கேற்ற மங்களகரமான நடிகை எனக்கு கோபம் வந்தால் என்னுடைய ஆண் நண்பரை நினைத்துக்கொண்டு தான் திட்டுவேன். அப்போது தான் எனக்கு கோபம் உச்சகட்டத்திற்கு வரும் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
என்ன தான் இருந்தாலும், பொழைக்க வந்த இடத்துல.. தமிழ்நாட்டில் ஒரு நடிகை.. கேராளவில் ஒரு நடிகை.. தற்போது, தன்னை விட வயது அதிகமான அமைதி நடிகையுடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரகசியமாக தஞ்சம் புகுந்துள்ளராம் மேலாடை நடிகர்.