ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட அவர் தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இவர் சூர்யா கதாநாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். நடிப்பின் மூலமும் அழகின் மூலமும், ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
முதல் முறையாக உண்மையை உடைத்த கமல் மகள்
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்கள் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான்.
பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது அப்பா அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிக பெரிய நடிகர்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த விஷயமாகும் என்பது குறிப்பிடதக்கது .