ஜெயிலர் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றார். 70 களின் ஆரம்பங்களிலிருந்து தற்போது வரை தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி சில நாட்களிலேயே வசூல் வேட்டையை அள்ளியது.
இந்த படம் ரஜினி ரசிகர்களால் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், திரிஷா உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
அதேபோல, தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களாக விளங்கும் சுனில், மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோரும் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் கொடுத்த அதிரடி பரிசு
இந்நிலையில் இயக்குனர் நெல்சனை அழைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம். காரை கொடுத்து காக்கா பிடிக்க விரும்பவில்லை. சில லட்சங்களில் காரை வாங்கி கொடுத்து விட முடியும்.
ஆனால், அதற்கு மேலே நாங்கள் உங்களுக்கு செய்கிறோம். உங்களுடைய அடுத்த படமும் சன் பிக்சர்ஸ் பேனரில் தான் இயக்க வேண்டும்.
அதற்காக ஜெயிலர் படத்தில் உங்களுக்கு கொடுத்த சம்பளத்தை போல இரண்டு மடங்கு சம்பளத்தை உங்களுக்கு கொடுக்கிறோம் என கையை நீட்ட சொல்லி அட்வான்ஸை கொடுத்து அனுப்பி இருக்கிறது சன் பிக்சர்ஸ் என்று விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறுகின்றன.