நடிகை திரிஷா
தமிழில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் திரிஷா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தார்.
இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த அவர் இடையில் சில காலங்கள் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பின்னர் 96 படத்தின் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்த திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார்.
அப்படத்தில் அவர் கொள்ளை அழகில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். 40 வயதாகியும் இன்னும் இளமையுடன் காட்சியளிக்கிறார் நடிகர் திரிஷா. தற்போது நடிகர் விஜயின் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை திரிஷா
இந்நிலையில் நடிகை திரிஷா வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே ஸ்ட்ராபெரி மற்றும் லெமன் கலந்த ஜூஸ்-ஐ கையில் வைத்துக்கொண்டு தன்னுடைய செல்போனை வைத்து செல்பி எடுக்க முயற்சிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நடிகை த்ரிஷாவின் கையில் புதிய டாட்டூ ஒன்று குத்தப்பட்டிருக்கிறது. இதனை Zoom செய்து பார்த்த ரசிகர்கள் அந்த டாட்டுக்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.