நடிகை மீனா வேமுரி
சீரியல் நடிகர், நடிகைகள் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களாகவே திரையில் தோன்றி நம்மை கவர்கின்றனர். அந்த ரோலை முழுவதுமாக உள்வாங்கி கொண்டு அவர்கள் உயிரை கொடுத்து நடிப்பதால் அவர்களின் உண்மையான பெயரை காட்டிலும் சீரியலில் அவர்கள் நடிக்கும் ரோல்களின் பெயர்களே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது.
அவர்களை எங்கு பார்த்தாலும் அந்த பெயரை சொல்லியே அழைப்பார்கள், பேசுவார்கள். அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடிப்பவர் சின்னத்திரை நடிகை மீனா வேமுரி.
இவர் இதற்கு முன்பு சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை சினிமாவிலும் துணை நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருப்பார். இப்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்வதியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இப்படித்தான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள்
சமீபத்தில் யூ-ட்யூப் தளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த இவர் அந்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் இணைய பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
குறிப்பாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசிய இவர் பட வாய்ப்புக்காக நேரடியாக யாரும் படுக்கைக்கு அழைக்க மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் தொலைபேசி வழியாக தான் இப்படியான அட்ஜெஸ்மெண்டுக்கான அழைப்புகள் இருக்கும்.
அவர்கள் ஆனால்.. என்று இருக்கும் போதே அந்த போனை நான் கட் செய்து விடுவேன். இது மாதிரியான அட்ஜெஸ்மெண்டை செய்து கொண்டால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த பட வாய்ப்பு வேண்டாம் என கூறி விடுவேன்.
இதனால் பல பட வாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் ஆகி வருகின்றது.