நடிகை சுகன்யா
80,90ஸ் காலக்கட்டங்களில் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக எக்கசக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகை சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது.
கணவரை பிரிந்த அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிப்பில் பிசியாகியுள்ளார். அவர் தற்போது நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் உருவாகும் தீ இவண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். மேலும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பன் டாக்
இவருடைய விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை நடுவே நடைபெற்றது. ஒருவழியாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ”கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது.
சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்தே கிடைத்தது.
ஒருவேளை நான் 50 வயசுக்கு பிறகு திருமணம் ஓகே.. தாம்பத்தியம் கூட ஓகே.. ஆனால்,.. எனக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா..? அல்லது ஆயா என்று அழைக்குமா..? என்று குழப்பமாக இருக்கிறது. இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயமாக பார்கிறேன். என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.