நடிகை சம்யுக்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வந்தது.
மேலும் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இருவரும் கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி ஒரே மாதத்தில், படுக்கையில் படுத்தி எடுக்கிறார் என் கணவர் என்று கூறி விவாகரத்து வரை சென்றவர் நடிகை சம்யுக்தா. 24 மணி நேரமும் என்னை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் எப்படி என்னால் முடியும்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து ரசிக்க படுக்கையறையில் கேமரா-வை வைத்தார் என் கணவர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி பகீர் கிளப்பினார் நடிகை சம்யுக்தா.
ஆக்ரோஷமான பதிவு
இந்நிலையில், புது கார் ஒன்றை வாங்கியுள்ள அவர், பூஜை போட்ட வீடியோ வை வெளியிட்டு ஆக்ரோஷமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். கடினமாக உழைக்கும் சுதந்திரமான பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை. நான் ஒப்புக்கொள்கிறேன்.. இது சவாலானது தான்.
ஆனால், உணமையான இதயம், சுத்தமான எண்ணங்கள் கொண்ட ஒரு பெண்ணால் இந்த சமுதாயத்தில் நீந்தி பிழைப்பது என்பது கடினமானது தான். நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல..
நாம் எதை செய்தாலும் குறை பேச நான்கு பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். உங்கள் வெற்றியை அவர்களுக்கு செருப்படியாக கொடுங்கள். உங்கள் வெற்றி பேசட்டும்.. என்று ஆக்ரோஷமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.