பொதுவாகவே சினிமா உலகில் ஒரு டயலாக் மூலம் பிரபலமான எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். அப்படி பிரபலமான பல நடிகர்கள் அதற்கு பின் என்ன ஆனார்கள்? என்றே அதற்கு அந்த வகையில் ஒரு வரி டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜெயக்குமார். இவர் வடிவேலுவை பார்த்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்வார்.
அந்த டயலாக் மூலம் தான் நடிகர் ஜெயக்குமார் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களிலும் நடித்திருந்தார். இருந்தாலும் அவரை பிரபலமாக்கியது அமெரிக்க ஜனாதிபதி என்ற டயலாக் தான். சினிமாவில் பல கஷ்டப்பட்டு பிறகு தான் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
பின் குடும்ப சூழ்நிலை பொருளாதாரத்தின் காரணமாக குடும்பத்தையும் சினிமாவையும் பேலன்ஸ் பண்ண முடியாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். தற்போது இவர் ஜெனரேட்டர் மெக்கானிக்காக இருக்கிறார். இவரை சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் வடிவேலு அவருடன் நடித்த நடிகர்களையும் நன்றாக பார்த்துக் கொள்வார். அந்த அளவிற்கு நல்ல தங்கமான மனிதர். நான் சினிமாவில் கிட்டத்தட்ட 24 வருடங்கள் இருக்கிறேன்.
லேட்டஸ்ட் பேட்டி
எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகளும் சம்பளமும் எனக்கு கிடைக்கவில்லை என் உடன்பிறந்த மூன்று அக்காவுக்கும் நான்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும். இதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து ஜெனரேட்டர் மெக்கானிக் வேலை செய்தபடியே பல இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கேட்டு கடிதம் போட்டு வருகிறேன். தற்போது கூட வடிவேலு சார் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்துள்ளேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.