மனிஷா பிரியதர்ஷினி
தமிழ் சினிமாவில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் களவாணி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல் மற்றும் நாயகியாக ஓவியா நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி இவர் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானது மட்டுமில்லாமல் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி ஆகியவையாகும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது தமிழில் அதிக அளவு ஆர்வம் இருந்ததன் காரணமாக தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார் அதேபோல கல்லூரியிலும் 95 சதவீத மதிப்பெண் பெற்று கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்.
தற்போது என்ன செய்கிறார் தெரியுமா..?
ஆறு வருடங்களாக இவரைக் குறித்து எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் வரவில்லை. மேலும், களவாணி படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை. தற்போது இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. விரைவில் இவர் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.