நடிகை பிரியா பவானி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவளர்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி. இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம்வருகிறார் இவர்.
தனக்கென ஒரு பாணியில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதால் இவருக்கு தனியாக ரசிகர்களே உள்ளனர் என்று கூறலாம். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை.
மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் ருத்ரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதலனை பிரிந்த பிரியா பவானி ஷங்கர்
தற்போது ராஜவேலு என்ற நபரை காதலித்து வரும் பிரியா பவானி ஷங்கர் இது என்னுடைய இரண்டாவது காதலன்.. அவருக்கும் நான் இரண்டாவது காதலி என்பதை பேட்டி ஒன்றில் மறைமுகமாக பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய முதல் காதலன் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். நான் முதலில் காதலித்த நபர் குறித்து பலரும் என்னிடம் மோசமானவர் என்று கூறினார்கள்.
ஆனாலும், தொடர்ந்து அவரை காதலித்து வந்தேன். ஒரு கட்டத்தில், எனக்கே அவர் மோசமானவர் என்று தெரிய வந்தது. இப்படி மோசமானவரை நம்பி ஏமாந்து விட்டேனே என அழுது புலம்பினேன் என்று பதிவு செய்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.