சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த சௌந்தர்யா கடந்த ஆண்டு தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனமே கொடுத்தனார். இப்படத்திற்கு பின் இனி மகள் பேச்சை கேட்க கூடாது என்று ரஜினி முடிவு எடுத்துள்ளார். இது குறித்து அவரே காலா ஆடியோ லாஞ்சில் பேசி இருப்பார்.
ரஜினி மகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த பிரபலம்
கோச்சடையான் படத்தை தயாரித்தவர் முரளி மனோகர் என்பவர். இவர் வெளிநாட்டு தமிழர். இப்படத்திற்கு அபிநந்த் சாகர் என்பவர் 5 கோடி ரூபாய் கடனாக முரளி மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை முரளி மனோகரால் திருப்பி செலுத்த முடியவில்லையாம்.
இதையடுத்து அபிநந்த் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தீர்ப்பில் முரளி மனோகர் வட்டியுடன் 7 கோடி தர வேண்டும் என்றும் 6 மாதம் சிறை தண்டனை என்றும் கூறியுள்ளனர். இந்த நிலைமையில் இருக்கும் முரளி மனோகருக்கு ரஜினி உதவி செய்யலாம் என்று பயில்வான் பேசியுள்ளார்.