நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
முதன் முதலில் நீச்சல் உடையில் என்னை அவர் பார்த்தபோது..
திகில் படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நயன்தாரா கவர்ச்சியாக நடித்தேன் என்று போட்டு உடைத்திருக்கிறார். அதற்கு பதிலளித்த நடிகை நயன்தாரா இயக்குனர் விஷ்ணுவர்தன் தவிர வேறு யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை.
இந்த திரைப்படத்திற்கு நான் ஒத்து வருவேனா என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை என்னால் பண்ண முடியுமா..? என்று நினைத்தார்கள். ஏன் இந்த தயக்கம் என்றால் அந்த நேரத்தில் நான் நடித்தது எல்லாமே கிராமப்புறம் சார்ந்த குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். ஆனால், கவர்ச்சியான கேங்ஸ்டர் திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோயின் போல என்னால் நடிக்க முடியுமா..? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். என் மனதிற்குள் அது உறுத்திக்கொண்டே இருந்தது. ஏன் என்னால் செய்ய முடியாது.. என்ற ஒரு வேகம்.