கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சுப்பையா சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராவார். இவரது மகன் சிபிராஜ் பல திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தனது திரைப்பட வாழ்க்கையில் பெரியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் சத்யராஜ் சம்பளமில்லாமல் படத்தை எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து அன்றைய திராவிட கழக தலைவர் வீரமணி, பெரியாரின் மோதிரத்தை அன்பளிப்பாக அவருக்கு வழங்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் மீது பற்று கொண்டு தமிழரோடு இருந்து வந்த சத்யராஜ், பேரறிவாளன், சாந்தன், முருகனின் மரணத்தை ரத்து செய்யக்கோரி எடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார்.
அவரே கூறிய ஷாக்கிங் நியூஸ்
தற்போது சத்யராஜ் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், வேதன் என்ற படத்தில் நடிகை அமலாவுக்கு மாமனாராக நடித்துவிட்டு ஜீ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அம்பிகா மிஸ்டர் பரத் படத்தில் எனக்கு மருமகளாக நடித்துவிட்டு, ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் தனக்கும் ஜோடியாக நடித்திருந்த்தை குறிப்பிட்டுள்ளார்.