நித்தியானந்தா
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகிலுள்ள ராமநகர் மாவட்டம், பிடதி பகுதியில் சாமியார் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத், கர்நாடகா காவல்துறையினரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
நித்தியை திருமணம் செய்ய ரெடி
இதனிடையே, தமிழ் சினிமா நடிகையான பிரியா ஆனந்த் நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்வேன் என மிகவும் ஜாலியாக கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில், “நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக் கூட மாற்றவே ண்டிய தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.