நடிகை ரேகா நாயர்
இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர். சின்னத்திரை நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரேகா நாயர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறாததால் சைடு ரோலில் நடித்து வந்தார்.
முதல் படத்திலேயே நிர்வாணமாக நடித்து பலருக்கு அதிர்ச்சியளித்திருந்தார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதனால் கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சிற்கு வாக்கிங் வந்த பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.
இந்த வயசில் முதலிரவு நடந்துச்சு
இந்நிலையில், சமீபத்தில் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்த இவர் தன்னுடைய முதல் திருமணம் பற்றி பேசி இருக்கிறார். நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 17 வயது தான். அப்போதே திருமணம், முதலிரவு என நடந்தது. திருமணம் நடந்த வேகத்திலேயே எனக்கு விவாகரத்தும் நடந்து விட்டது. என் குடும்பத்தில் ஏக்கர் கணக்கில் நிலமிருந்தும் குடும்பம் நடத்துவது சிறப்பாகவே இருந்தது.
இதையடுத்து பல கஷ்டங்களை சந்தித்து வந்த இவர் 35 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம். பலரும் குடும்ப விஷயங்களை பேச தயங்கும் நிலையில் ரேகா நாயர் வெளிப்படையாக பேசியுள்ளார்.