தமன்னா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ‘கேடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அயன் பாகுபலி, கண்டேன் சீதையை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். அதன் பிறகு தமிழில் மார்க்கெட் சரிய தொடங்கியதால் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மராத்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். மேலும் மாடலிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தமன்னாவிடம் அத்துமீறிய நபர்
இந்நிலையில் தமன்னா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஒருநபர் பாதுகாவலர்களை தாண்டி வந்து அவரது கையை பிடித்துவிடுகிறார். அவரை காவலர்கள் பிடித்து வெளியில் அனுப்ப, தமன்னா அவர்களை தடுத்து அந்த இளைஞருக்கு கைகொடுத்து அதன் பின் செல்பி எடுத்து கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.