நடிகை மீனா
90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா. இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.
திருமணத்திற்கு முன் இப்படியொரு செயலை செய்த நடிகை மீனா
நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டது போல் இயக்குனர் சேரனும் கலந்து கொண்டு மேடையில் மீனா பற்றிய சில சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பொக்கிஷம் படத்தில் பத்மபிரியாவுக்கு வாய்ஸ் கொடுக்க யாரை வைத்து டப்பிங் செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். நன்றாக தமிழ் பேசும் அதுவும் தமிழை அழகாக பேச வேண்டும் என்று நினைத்த சமயத்தில் மீனா நியாபத்திற்கு வந்தார். அந்த சமயத்தின் போது இரு நாட்களில் மீனாவுக்கு திருமணம். அப்போது போன் செய்து மீனாவை கேட்டால் திட்டுவாரோ என்று யோசித்தேன். அப்படி மீனாவின் அம்மாவிடம் இதை பற்றி கூறினேன். உடனே மீனாவிடம் கொடுத்து விட்டார். மீனாவிடம் இதுபற்றி கூறியது ஓகே சொல்லி இருக்கிறார். நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு அதற்கு முன் தினம் மாலை டப்பிங்கை பேசி முடித்துவிட்டு சென்றார் மீனா. அப்படி அவர் செய்ததற்கு காரணம் மீனா ஒரு கலை காதலர் என்று சேரன் கூறியுள்ளார்.