ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சிற்கு வாக்கிங் வந்த பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.
சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்
ஆதிகாலங்களில் பெண்களின் மொலைகள் மறைக்கப்படவே இல்லை. யாரும் ஜாக்கெட் அணியவில்லை. ஓவியர்கள், கோயில் சிலைகள் என எதிலும் பெண்களின் மொலைகள் மறைக்கப்படவில்லை. ஆனால், தற்போது மறைக்கிறார்கள். மொலை என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்றால் வேறு என்னவென்று சொல்ல வேண்டும். அப்படி கூறினாலும் அது ஒரே உறுப்பை தான் குரிக்கப்போகிறது எனும் போது பெயரை மாற்றி என்ன பயன் என்று கேட்டுள்ளார் நடிகை ரேகா நாயர். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.