ரஜினிகாந்த்
சினிமாவின் மீதிருந்த ஆசையால் நடத்துனர் பணியை உதறி தள்ளிவிட்டு திரைத்துறையில் இயக்குனர் கே.பாலச்சந்திரன் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது தொடக்கத்தில் பல கஷ்டங்களை தாங்கி பின்னர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். பல அவமானங்களை சந்தித்த ரஜினிகாந்த் பின் நாட்களில் தான் எப்படி முன்னேறினேன்? என்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி தகவலையும் பகிர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட 179 படங்களில் நடித்துள்ள அவருக்கு பல திரைப்படங்கள் பெரும் வெற்றியில் அமைந்திருக்கின்றன. தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர், லால்சலாம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஞானவேல் ஆகியோரிடம் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த்
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி இமயமலைக்கு செல்ல உள்ளாராம். கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட இங்களுக்கு செல்லவுள்ளராம்.
கடந்த 2010ல் இருந்து தான் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்று வரும் ரஜினிகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக செல்லாமல் இருந்ததால் ஜெயிலர் படம் வெற்றியை பெறவேண்டி இந்த ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எப்போது தன் தந்தையுடன் செல்லும் மகள் ஐஸ்வர்யாவும் தனுஷை பிரிந்தப்பின் ரஜினிகாந்துடன் இமயமலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.