நடிகை சரண்யா பொன்வண்ணன்
நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள இவர் திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்ததை விட குணசித்திர வேடங்களில் குறிப்பாக ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தது தான் அதிகம். அந்த வகையில் எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி,முத்துக்கு முத்தாக,மகளிர் மட்டும், ஒரு கல் ஒரு கண்ணாடி, கொடி என பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருந்தார்.
படத்தில் நடித்துக் கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு ஸ்பெஷல் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர் பல பேருக்கு நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது தெரியாது. நடிகை சரண்யா கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் உலா வருகிறார். எப்போதும் புடவையில் நடிக்கும் சரண்யா வெளிநாட்டில் மாடர்ன் டிரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சரண்யாவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.