தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரகதி. தற்பொழுது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். நடனம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் வந்து பேசிய அந்த பிரபல சீனியர் காமெடி நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் இதனால் அதிர்ந்து போன நான் அவரிடம் எதுவும் பேசாமல் மாலையில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவர் கேரவேனுக்குள் அழைத்து பேசினேன். நீங்கள் செய்தது மிகவும் தவறான காரியம் இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவரிடம் கூறினேன்.
நான் நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் உங்களின் இமேஜ் இத்தனை ஆண்டுகள் நீங்கள் உழைத்த உழைப்பு இதனை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்து உங்களிடம் மட்டும் கூறுகிறேன். இனிமேல் இதுபோன்ற என்னிடம் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவரை எச்சரித்து அனுப்பியதாக பிரகதி கூறியுள்ளார்.