நடிகை துளசி நாயர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துளசி நாயர். மணிரத்தினம் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது இப்படத்தில் அவர் அறிமுகமாகும் போது அவரது வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவுடன் 2014-ம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும்அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை இதனையடுத்து அவர் படிப்பை தொடர சென்று விட்டார் இவர் மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிப்பதற்காக தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அம்மணி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேண்டுமானால் சினிமாவிற்குள் இறங்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
14 வயதிலேயே ரெண்டு படத்துல ஹீரோயின்
2014 ஆம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் நடித்தார். வெறும் 14 வயதிலேயே சினிமா துறைக்கு வந்த இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நடிக்கலாம் என்ற திட்டத்தில் தன்னுடைய படிப்பை கவனிக்க சென்று விட்டார் நடிகை துளசி நாயர். சென்ற இடத்தில் தாறுமாறாக உடல் எடை கூடி குண்டாகி போய்விட்டார் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.