நடிகை சிந்து
தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது. அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் படித்துரை பாண்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது போல் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது கேன்சர் நோய் தாக்கி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைக்கு உதவி வேண்டும் என கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். பல திரைப்பிரபலங்களும் அவருக்கு உதவி வழங்கினர். இந்நிலையில் நடிகை சிந்து அண்மையில் அளித்த பேட்டியொன்றில், “முதல் முறை நோயின் வீரியம் அதிகமாக இருந்து, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன். கீமோ தெரபி சிகிச்சை பெற்று வந்தேன்.
கசாப்பு கடையில் அறுத்து எரிவது போல் என் மார்பகத்தை எடுத்தாச்சு
நாட்டு மருத்துவம் மூலமாக ஐம்பது வீதம் குணமானேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வந்தேன். வலது புற மார்பகம், புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டதால் அதனால் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. அதனால் ஏற்பட்ட வலது கை வீக்கம் இன்னும் உள்ளது. இதோடுதான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக எனது நண்பர்கள், பொதுமக்கள் உதவியால் சமாளித்து வந்தேன்.