நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூரம்
பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில் வசிக்கும் குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக மைத்தேயி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மைதேயி சமுதாயத்தினர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எதிராக குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அம்மாநிலத்தில் குகி பழங்குடி மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் நடந்திருப்பதாக தெரிகிறது. பழங்குடிய பெண்களை நிர்வாணமாக சாலையில் அழைத்துச் சென்றது, மட்டுமில்லாமல் கும்பலாக பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் வசிக்கக்கூடிய குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக மைதேயி என்ற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வைதேகி சமுதாயத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கும்பல்
இந்நிலையில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.