நடிகை பாவனி ரெட்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. சின்னத்தம்பி சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவரும் இவர் சின்னத்தம்பி தொடருக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நடித்து பின் பாதியில் விலகினார். இந்த நிலையில் நடிகர் பிரதீப் காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரே ஆண்டில் நடிகர் பிரதீப் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி செய்தியாளருக்கு பேட்டி கொடுத்த பவானி ரெட்டி சாதர்னமான கணவன் மனைவிக்கு இருக்கும் சண்டைகள் தான் எங்களுக்கும் இருந்தது ஆனால் இதற்காக அவர் தற்கொலை முடிவு வரை செல்வார் என எனக்கு தெரியாது என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டு, திரும்பவும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட பாவனி 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
என்னது பாவ்னி ரெட்டி 35 வயதில் கர்ப்பமா
நிகழ்ச்சிக்கு பின் தன் காதலை ஏற்காமல் இருந்த பாவனி பிக்பாஸ் ஜோடிகள் 2 சீசனில் தான் தன் காதலை வெளிப்படுத்தினார். அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாவனி ஒரு விண்ணப்பத்தை ஃபில் பண்ணும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி இருந்துள்ளது. அதை படித்த பாவ்னியிடம், ஆமாம் என்று அமீர் கூறியுள்ளார்.
உடனே ஷாக்கான பாவனி ஏன் அமீர், அது இப்போது இல்லை, 5 வருடத்திற்கு பின் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று பாவனி தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ‘ஏற்கனவே 35 வயசாகிடுச்சி, இன்னும் 5 வருஷம்னா 60 வருஷத்துக்கு பின் கர்ப்பமாகு’ என்று கலாய்த்து வருகிறார்கள்.