சோகத்தில் முடிந்த புகைப்பட மோகம்
சமூக வலைதளங்களில் சாகச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் லைக்குகளை பெற முடியும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற மயக்கத்தில் பலரும் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பது சில நேரங்களில் அந்த ஆபத்தில் சிக்கி விடுவது என வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்தவகையில் மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட்-டில் உள்ள கடல் பகுதியில் தம்பதி ஒருவர் தங்களின் ஆபத்தான முறையில் புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தங்களுடைய குடும்பத்தினருடன் கடற்கரை அழகரை ரசிக்க சென்றிருந்த இவர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் தங்களுடைய போனை கொடுத்து கடற்கரையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் அமர்ந்து இருந்த கற்களை நோக்கி வந்த ராட்சத அலை ஒன்று குழந்தையின் தாயை கடலுக்கு இழுத்து சென்றது, இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நொடியில் நேர்ந்த விபரீதம்
என் கண் முன்னாலும் என்னுடைய கலந்து குழந்தைகள் முன்னாலும் எங்கள் மனைவியை என் மனைவியை கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது. இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து நாங்கள் எப்படி வெளிவரப்போகிறோம் என்று தெரியவில்லை என தப்பித்த கணவர் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.