பிக் பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் விக்ரமன். இவர் ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரசியலில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். அக்கட்சியின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியது.
அந்த நிகழ்ச்சியில் சமூக நலன் சார்ந்த பல கருத்துக்களை பேசி நல்லவர் போல் நடித்து வேஷம் போட்டு தான் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார் விக்ரமன் என பல சமூகவலைதளவாசிகள் கொந்தளித்துள்ளார்கள்.
நல்லவர் வேஷம் போட்டு 15 பெண்களுடன் உறவு
சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் மீது பரபரப்பு புகார் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி என்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார். மேலும் விக்ரமன், தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு, அந்த பெண்ணுடன் உருவில் இருந்தார். இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரியவந்தது.
விக்ரமன் இது மட்டுமின்றி 15 மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்தது எனக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளார். கிருபா முனுசாமி , விக்ரம் உடன் பேசிய மற்றும் அவருடன் எடுத்த கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.