நடிகை ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார். இவர் இந்த படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே திரைப்படங்களில் நிறைய பின்னணி இசை பாடகர் ஆக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
பிறகு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதன் மூலமாக நிறைய படங்கள் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் நடிகர் கமலுடன் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி , மாளிகை மற்றும் சொல்லக் கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
வெறும் துண்டை கட்டிக்கொண்டு வெளிநாட்டு நபருடன் இருக்கும் ஆண்ட்ரியா
சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள ஆண்ட்ரியா அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் வெறும் துண்டை அணிந்து கொண்டு வெளிநாட்டு நபருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.