நடிகர் சிவகார்த்திகேயன்
எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதல் முதலில் ஸ்டார் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை வாங்கினார் அதோடு விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் VJ- வாக தொகுத்து வழங்கினார் பின்னர் இவர் திறமையைக் கண்டு இயக்குனர் பாண்டியராஜ் மெரினா படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளித்தார்.
தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.
மகன் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடிய பிரபல நடிகர் சிவகார்த்திக்கேயன்
மகனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது மகன் குகன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனாவுடன் கூடிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.