நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம். இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.
17 வருஷத்திற்கு பின் பில்லா கெட்டப்பில் மாஸ் காட்டிய நயன்தாரா
அஜித்தின் பில்லா படத்தில் எப்படியொரு லுக்கில் வந்தாரோ, அதேபோல் ஸ்டைலிஷ் லுக்கில் நயன் தாரா மாறியிருக்கிறார். துப்பாக்கி, குடும்பபாங்கா சேலை, மற்றும் மாஸ் எண்ட்ரி என்று நயன் தாரா சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 17 வருடம் கழித்து இப்படியொரு லுக்கிற்கு அட்லீ, நயன் தாராவை மாற்றியிருக்கிறார். இதனால் நயன் தாரா மார்க்கெட் எகிற, திரிஷாவின் ஆட்டம் ஸ்லோவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.