இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கேளடி கண்மணி , செல்லமே போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்துஇருக்கிறார் . அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு பிறகு அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் பிறந்தார். தற்போது இவர்களது மகனுக்கு 7 வயது ஆகிறது.
காவாலா பாடலுக்கு கிருத்திகா அண்ணாமலை குத்தாட்டம்
மற்ற சீரியல் நடிகைகள் போலவே சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில், காவாலா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு அசத்தல் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.