தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக பணியாற்றி பின் சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தவர் மகாலட்சுமி. முன்னணி சீரியல்களான அரசி, வாணிராணி, பிள்ளைநிலா, அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் போதே சில சர்ச்சைகளில் சிக்கினார். அதன்பின் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரின் திருமண புகைப்படங்கள் வெளியான போது… இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்குமோ? என்று தான் பலர் நினைத்தனர். பின்னர் ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பின்னர் தான், இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே திருமணம் ஆன தகவல் தெரிந்தது.
சூப்பரான கிஃப்ட் கொடுத்து அசத்திய மகாலட்சுமி
இந்நிலையில் நேற்று ரவிந்தர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய கணவருக்கு நடிகை மகாலட்சுமி புகைப்படம் ஒன்றினை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ரவீந்தர் பிரிக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.