நடிகை சினேகா
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. இந்நிலையில் சினேகா குறித்த ஒரு தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திரை உலகில் இவர் நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது ராகவா லாரன்ஸ், பிரசாந்த், அப்பாஸ், மாதவன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களோடு காதலில் எடுப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது.
சினேகாவின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி நடிகர்
அந்த சமயத்தில் தான் இவர் தனுசுடன் புதுப்பேட்டை படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து படுமோசமாக விமர்சனங்களை பெற்றார். மேலும் இவரை குடும்பப்பாங்கான கேரக்டரில் பார்த்திருந்த ரசிகர்கள் அனைவரும் இதனை விரும்பவில்லை இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வருவதும் குறைந்தது.