ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், செய்தி நிருபராகவும் ஆரம்ப காலகட்டத்தில் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது சின்ன திரையில் தனது அற்புதமான நடிப்பை காட்டி சீரியல்களில் கலக்கி வருகிறார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக மாறி இருக்கும் இவர் இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம். அந்த அளவு பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களையும், ஆண் ரசிகர்களையும் இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இன்ஸ்டாகிராமில் எப்போது இவர் புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
ரேஷ்மா பசுபுலேட்டியின் புது கணவர் இவரா..?
சினிமா சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சக நடிகர் நரேஷூடன் தற்போது அவர் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.மேலும் இந்த புகைப்படங்களை புதிதாக பார்க்கும் பலரும் இவர்தான் புஷ்பா புருஷனா..? என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.