நடிகை சித்தாரா
தமிழ் சினிமாவில் 90ஸ் நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நீங்காத இடம் பிடித்த நடிகைகள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் 90ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை சித்தாரா. 1989 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சித்தாரா.
1973 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கிளிமனூர் என்னும் பகுதியில் பிறந்த இவர் சினிமாவில் எந்த ஒரு பின்பலமுமின்றி நுழைந்தவர். இயக்குனர் கே பாலசந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம்மேலும், என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவர் தென்னிந்திய சினிமாவில் 60 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களை விட தமிழ் சினிமாவில் ஒரு பிரதான நடிகையாக திகழ்ந்து வந்தார்.
50 வயதாகியும் காதல் தோல்வியால் ஏற்பட்ட சோகம்
தற்போது 50 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார். இதற்கு காரணம் காதல் தோல்வி தானாம். சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவரை காதலித்து வந்துள்ளார் சித்தாரா. ஆனால் காதல் தோல்வியில் முடியவே விரக்தியில் கல்யாணத்தையே ஒதுக்கி வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவரது தந்தை மரணமும் அவரை வாட்டிவதைக்க, திருமணம் செய்யாலம் வாழ்ந்து வருகிறார்.