நடிகர் பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பவன் கல்யாண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். சினிமாவில் ஜொலித்த பவன் கல்யாணை அவரது ரசிகர்கள் ‘பவர் ஸ்டார்’ என அழைத்து வந்தனர். அதன்பிறகு சினிமா துறையில் இருந்து பவன் கல்யாண் அரசியலில் நுழைந்தார். அண்ணன் சீரஞ்சிவியின் பிராஜா ராஜ்யம் கட்சியில் யுவராஜ்யம் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு இந்த கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, பவன் கல்யாண் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பிறகு பவன் கல்யாண் புதிதாக கட்சியை தொடங்கினார். 2014ல் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை துவங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆந்திரா அரசியலில் தற்போது அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பவன் கல்யாண் திரைத்துறை, அரசியலில் இருக்கும் நிலையில் அவரது திருமண வாழ்க்கை என்பது அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகிறது. முதலாவதாக பவன் கல்யாண் 1997 ல் நந்தினி என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
51 வயதில் விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்
நடிகையும், மாடலுமாக இருந்த ரேணு தேசாயுடன், பவன் கல்யாண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதாக பரவிய தகவல் இருவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து நந்தினியை முறைப்படி பவன் கல்யாண் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ரேணு தேசாயை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2012ல் விவாகரத்து பெற்றனர்.
அதன்பிறகு ரஷ்யாவை சேர்ந்த நடிகையான அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் திருமணம் செய்தார். அவருடன் சுமார் 11 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் விரைவில் விவாகரத்டு பெறவுள்ளார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.