நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வடிவேலு. பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சினிமா வாழ்க்கையில் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். வடிவேலு தன்னுடைய படங்களில் எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்வாராம்.
இத்தனை ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கணமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பாராட்டி வருகின்றனர். தற்போது நடித்து வரும் இவர், சமீபத்தில் இந்த படத்தின் ராசா என்ற பாடல் வடிவேலு குரலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.
வடிவேலு நடிகைகளுடன் பண்ணை வீட்டில் உல்லாசம்
இந்நிலையில், வடிவேலு பற்றிய சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார். வடிவேலு நட்சத்திர நடிகனானதுக்கு பின்னர், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்டு மற்றாங்கள் வரை அவரே பார்த்துக்கொள்வாராம். அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு இயக்குனருக்கே அறிவுரையும் வடிவேலு சொல்லுவாராம். இரு படங்களில் வாய்ப்பு கொடுத்த நடிகைக்கு வடிவேலு மீண்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டாராம்.
அப்படி சந்திரமுகி படத்தில் சொர்ணா மேத்யூஸ் என்பவரை நடிக்க வைத்தது வடிவேலு தான் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரேயா சரண் வடிவேலுவுடன் கட்டிப்பிடித்து நடனமாட வைக்க பல லட்சம் சம்பளமாக வாங்கி இருந்தார். இந்த படத்தில் மும்தாஜ் தான் வேண்டும் என்று நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. சில நடிகைகளிடம் 8 மணிக்கு தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வடிவேலு கூட்டிச்சென்றும் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.