நடிகை சுவலக்ஷ்மி
90ஸ் கிட்ஸ்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுவலட்சுமி. 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பிறகு விஜயுடன் சேர்ந்து லவ் டுடே, நிலாவே வா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தது, மற்ற நடிகைகளை போல முகம் சுளிக்கவைக்கும் உடைகளை அணியாதது போன்ற காரணங்களால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களை கவர்ந்தவர்.
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, வங்க மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவருக்கு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் ராஜா அவரை அணுகிய போதும் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
நடிகர்களின் ஆசைக்கு இணங்காத ஒரே நடிகை இவர் தான்
மேலும் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரம் படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சியோ அல்லது படத்தில் சில கட்டாயம் இருக்கும் என்று இவர்களுடன் நடிக்க மறுத்துவிட்டார். நடிகர்களுடன் கிசுகிசுப்பில் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோக்களுடன் எந்த ஒரு காதல் சர்ச்சையில் சிக்காத ஒரே நடிகை சுவலக்ஷ்மி தான் என்று பயில்வான் கூறியுள்ளார்.