தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான இவர், பின்னர் கோலிவுட்டில் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.
அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவில் பெருமளவில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். பின் உடல்நலம் தேறிய அவர் தளராமல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
சித்தார்த் உடைத்த சீக்ரெட்
இந்நிலையில் சமந்தா கணவரை பிரிந்ததையடுத்து, ட்விட்டரில் மறைமுக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். அதில், “பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று.ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.