விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட் நிகழ்ச்சி தான் ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவிற்கு ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக நிகழ்ச்சியை கொண்டு போகிறார்கள். இது ஒரு பாடும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதன் மூலம் பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளனர். அப்படி பல பேரை உதாரணத்திற்கு கூறலாம். அந்தவகையில் இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இப்போது மக்களின் பேவரெட் பாடகராக வலம் வருகிறார் பூவையார்.
கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. விஜய் உடன் பாடி நடித்தார். அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.அத்தோடு மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பூவையார்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
இந்நிலையில் தற்போது பூவையார் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் மாகாபா பூவையாரிடம் எத்தனையாவது இப்போ படிக்கிறாய் எனக் கேட்கின்றார். அதற்கு பூவையார் “12 முடிச்சு காலேஜ் படிப்பதாக கூறுகின்றார். இதனைக் கேட்டதும் மாகாபா மற்றும் குரேஷி ஆச்சர்யத்தில் மூழ்கின்றனர்.