நடிகை அசின்
கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவியின் நடிப்பில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் வெளியானா ‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் நடிகை அசின், விஜய், அஜித், விக்ரம், கமல் என்று பல்வேறு முன்னனி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழில் பிஸியாக நடித்து வந்தார். அசின் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். சினிமா துறையில் மிகப் பெரிய மார்க்கெட்டில் இருக்கும் போதே பிரபல தொழில் அதிபரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார், அதேபோல் திருமணத்திற்கு பிறகு எந்த திரைபடத்தில் நடிக்கவில்லை, இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது.
அவரே கொடுத்த விளக்கம்
இதுவரை 100க்கும் குறைவான பதிவுகளை மட்டுமே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதேபோல கடந்த நான்கு ஆண்டுகளில் தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்கு மட்டுமே பதிவுகளை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை அசின் தன் கணவருடன் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். இதனால் அசின் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய அசின், நாங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அப்போது இது போன்று கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதிரியான செய்திகளை பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.