நடிகை சுரேகா வாணி
தமிழில் உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுரேகா வாணி. பிரபல தெலுங்கு நடிகையான இவர் சமீப காலமாக தமிழ் படங்களிலும் தலைகாட்டி வருகிறார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் அடுத்த சில மாதங்களில் தன்னுடைய கணவரை இழந்தார். இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் தற்பொழுது தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
திருமண வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்வது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று சுரேகா வாணியை இணையத்தில் பலரும் விளாசி வந்தனர். அதன் பிறகு சிங்கிள் மதராக திரைப்படங்களில் நடித்து தன்னுடைய மகள் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்த்திருக்கும் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளை ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இரவு பார்ட்டியில் தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் சுரேகா வாணி
சமீபத்தில் சுரேகா வாணி பெற்றோர்கள் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியானது ஆனால் இது குறித்து சுரேகா வாணி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் 45 வயதான சுரேகா வாணி ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியில் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.