நடிகை சினேகா
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. இந்நிலையில் சினேகா குறித்த ஒரு தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒரே சமயத்தில் இரண்டு பேத்துக்கு காதல் வலை விசிய சினேகா
நடிகை சினேகா வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இரண்டு பேரை காதலித்தசெய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக கிளம்பின. முன்னணி நடிகர்கள் வாழ்க்கையில் காதல் கிசுகிசு போன்றவை எல்லாம் சர்வ சாதாரணம் அதுபோலவேதான்இவருக்கும் நடந்தது. ஒரு காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்தை, சினேகா காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன.
ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை லவ் பண்ணிக் கொண்டிருந்த பொழுது அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பிரபல தொழிலதிபர் ஒரு வரையும் காதலித்ததாக தகவல்கள் கூறுகின்றன ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கழட்டிவிட்டு தொழில் அதிபரை நிச்சயதார்த்தம் நடந்த பட்டது. ஆனால் அதுவும் கைவிடப்பட்டு கடைசியில் வில்லனை ஹீரோ போன்ற கேரக்டரில் நடித்து வந்த பிரசன்னாவை திடீரென திருமணம் செய்து கொண்டார்.