நடிகை ரேகா நாயர்
இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர். சின்னத்திரை நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரேகா நாயர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறாததால் சைடு ரோலில் நடித்து வந்தார். முதல் படத்திலேயே நிர்வாணமாக நடித்து பலருக்கு அதிர்ச்சியளித்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சிற்கு வாக்கிங் வந்த பயில்வான்
ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.
சர்சையைக் கிளப்பிய பிரபல நடிகை
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேகா ‘தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என்றும் அவர் மீது தான் தீராத காதல் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை தனுஷை திருமணம் செய்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இது மக்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.